Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2173 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2173முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று இங்கு அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது – அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி – ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம் இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் – 92
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு.
வான் ஆகி, Vaan Aagi - ஆகாசமாகியும்
தீ ஆய், Thee Aay - அக்நியாகியும்
மறி கடல் ஆய், Mari Kadal Aay - அலையெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாகியும்
தேன் ஆகி, Then Aagi - தேன்போன்றும்
பால் ஆம், Paal Aam - பால்போன்றும் பரம போக்யனான
திருமாலே, Thirumaalee - எம்பெருமானே!
முன் ஒருநாள், Mun Orunaal - பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை, Mannai - (பிரளயகாலத்தில் உட்கொண்டிருந்த) இவ்வண்டத்தை
உமிழ்ந்த-, Umizhndha - (உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு, Vayiru - உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய், Aan Aaychchi Vennyei - இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதையென்னும் இடைச்சி கடைந்துவைத்த வெண்ணெயை
விழுங்க, Vizhunga - அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே, Niraiyumee - நிறைந்துவிடுமோ? [நிறைய மாட்டாது]