| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 217 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 5 | ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5 | ஆய்ச்சியர் சேரி,Aaychiyar Seri - இடைச் சேரியிலே அளை,Alai - (இடைச்சிகள் கடைவதாக) (மத்தை நாட்டி) உடைத்த தயிர்,Thayir - தயிரையும் பால்,Paal - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும் உண்டு,Undu - அமுது செய்து பேர்ந்து,Perndhu - (அவ் வளவோடு திருப்தி யடையாமல்) பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே) அவர்,Avar - அவ் லிடைச்சிகள் கண்டு,Kandu - (ஒளிந்திருந்து) (இவன் திருடுகின்ற போதில்) கண்டு பிடிக்க,Pidikka - (இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள பிடி யுண்ட,Pidi Unda - (அவர்கள் கையில்) பிடிபட்டு வெண்ணை,Vennai - (அதற்கு தப்ப மாட்டாமல்) வெண்ணெயை கொள்ள மாட்டாது,Kolla Maattaadhu - (தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல் அங்கு,Angu - அவர்கள் வீட்டில் ஆப்புண்டு இருந்தானால்,Aappundu Irundhaanal - கட்டுண்டிருந்த கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அடியுண்ட அமுதினால்,Adi Unda Amudhinal - (அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |