Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 217 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
217பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 5
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு
வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5
ஆய்ச்சியர் சேரி,Aaychiyar Seri - இடைச் சேரியிலே
அளை,Alai - (இடைச்சிகள் கடைவதாக) (மத்தை நாட்டி) உடைத்த
தயிர்,Thayir - தயிரையும்
பால்,Paal - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு,Undu - அமுது செய்து
பேர்ந்து,Perndhu - (அவ் வளவோடு திருப்தி யடையாமல்) பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்,Avar - அவ் லிடைச்சிகள்
கண்டு,Kandu - (ஒளிந்திருந்து) (இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க,Pidikka - (இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட,Pidi Unda - (அவர்கள் கையில்) பிடிபட்டு
வெண்ணை,Vennai - (அதற்கு தப்ப மாட்டாமல்) வெண்ணெயை
கொள்ள மாட்டாது,Kolla Maattaadhu - (தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு,Angu - அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்,Aappundu Irundhaanal - கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அடியுண்ட அமுதினால்,Adi Unda Amudhinal - (அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;