Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2168 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2168முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சர்வேஸ்வரன் வந்து இப்படி வந்து சந்நிஹிதன் ஆனபின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடித்து ஓடிப் போக வமையும் என்கிறார் – நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும்  இல்லை -திருவாய் மொழி-5-2-1-என்னுமா போலே – 87
இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
முனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக்
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.
கனி சாய, Kani Saaya - விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று, Kandru - வத்ஸாஸுரனை
எறிந்த, Erintha - எறிதடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான், Tholaaan - திருத்தோள்களையுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே, Kanai Kazhale - ஆபரணத்வநியையுடைய திருவடிகளை
கண்பதற்கு, Kanpatharku - ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு, Nanbu - நன்றாக
அம் நாவல் சூல் நாடு, Am Naaval Soor Naadu - அழகிய ‘ஜம்பூ’ என்று பேர்படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த, Arindha - அறிந்துவிட்டன;
எழு நரகம் வாசல், Ezhu Naragam Vaasal - (இப்படியானபின்) ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி, Ini - இனிமேல்
புகுவார் ஆர், Puguvaar Aar - பிரவேசிப்பவர் யாவர்?
முனியாது, Muniyadhu - (ஒருவருமில்லை) (ஓ யமகிங்கரர்களே!) (உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என்மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தான் கோமின், Moori Thaan Koamin - (இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப்போட்டுப் பூட்டுங்கோள்.