Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2166 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2166முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம் கண்டு அனுபவித்தாயாய் ஏறிமறிந்து இருக்கிற நீ இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன என் செய நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன இந்த்ரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்திலே  இழிந்த வித்தனை யல்லது நீ அவன் படிகளிலே என் கண்டாய் என்கிறார் – 85
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், – வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ.
பொறி ஐந்தும், Porii Aindhum - பஞ்சேந்திரியங்களையும்
வடிவில் உள் அடக்கி, Vadivil Ula Adakki - (வெளியில் மேயவொட்டாதபடி) சரீரத்திற்குள்ளே அடங்கியிருக்கச்செய்து
போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக்கொண்டு
நெறி, Neri - ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற, Nindra - நிலைத்து நின்ற
நெஞ்சமே, Nenjamai - மனமே!
நீ, Nee - நீ
பாம்பு அணையினான், Paambu Anaiyinan - சேஷ்ஷாயியான பெருமானுடைய
புள் கோடி, Pul Kodi - கருடப்பறவையாகிற த்வஜத்தை
கண்டு, Kandu - ஸேவித்து
அறிதியே, Aridhiyey - அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி, Padi - அவனது திருமேனியை
கண்டு அறிதியே, Kandu Aridhiyey - ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய், Kooraai - சொல்லு