| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2164 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ- அது கொண்டு கார்யம் கொள்ளாதே மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார் – 83 | வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர் நிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல், பேராழி கொண்ட பிரான்? | உரவு உடைய, Uravu Udaiya - மிடுக்கை யுடைத்தான நீராழியுள், Neeraazhiyl - நீரையுடைய திருப்பாற்கடலிலே கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்து, நேர் ஆ(ன), Ner Aan - எதிரியாகவந்த நிசாசரர் மேல், Nisaacharar Mel - மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின்மீது பேர் ஆழி, Peer Aazhi - (அவர்கள் நீறாகும்படி) பெரிய சக்ராயுதத்தை கொண்ட, Konda - கையிற் கொண்டிருக்கிற பிரான், Piraan - உபகாரகனே! வரை குடை ஆக, Varai Kudai Aaga - (இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கைநிற்க வல்ல திருவாழியாழ்வானிருக்கவும் அவனைக்கொண்டு காரியங்கொள்ளாமல்) (ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும். தோள் காம்பு ஆக, Thol Kaambu Aaga - தனது திருத்தோளே அந்தக்குடைக்குக் காம்பாகவும் ஆக்கி ஆ நிரை காத்து, Aa Nirai Kaathu - பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து, ஆயர் நிரை விடை ஏழ், Aayar Nirai Vidai Ezh - (நப்பின்னைப் பிராட்டிக்காக) இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும் செற்ற ஆரு, Settra Aaru - முடித்த விதம் என்னே, Ennae - எங்ஙனே? |