Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2163 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2163முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே என்றவர்க்குக் குறை தீரும்படி சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் – 82
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.
மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான், Maan - மாரீசனாகிற மாயமான்
மாய, Maaya - இறந்துவிழும்படி
எய்தான், Eydhaan - அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை, Varai - மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார், Padai Aarum Vaal Kannaal - வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள், Paarasi Naal - த்வாதசியன்று
பை பூ தொடையலோடு, Pai Poo Thodaiyalodu - பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடுகூட
ஏந்திய, Aendhiya - திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம், Thoopam - தூபமானது
இடை இடையில் மீன், Idai Idaiyil Meen - (ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய, Maaya - மறையும்படி
மாசூணும், Maasoonum - மாசு ஏறும்படி பண்ணாநிற்கிற
வேங்கடமே, Vengadame - திருமலையேயாகும்.