Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2160 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2160முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆஸ்ரிதருக்காக   தன்னை அழிய மாறி மேல் விழுந்து கார்யம் செய்யும் ஸ்வபாவன் என்று  இறே சொல்லிற்றே நின்றது – அது பின்னை எங்கே கண்டோம் அவனுக்கு -என்னில் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் – 79
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?
மண்தா என மாவலியை இரந்து, Manthaa Ena Maavaliyai Irandhu - (‘மூவடி) நிலத்தை எனக்குத்தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
ஒண் தாரைநீர், On Thaarainir - (அவனும் மறுக்கமாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க) அழகிய அந்த நீர்த்தாரை
அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையிலே
தோய, Thoya - வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார், Neel Visumbilaar - பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை, Am Kai - அழகிய கைகள்
தோய், Thoy - ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே, Aduthu Nimirthilaye - கடுக ஓங்கி வளரவில்லையோ?
கொண்டானை, Kondaanai - (இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து) தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால், Allaal - பழிக்கிறார்களேயன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார், Koduththaarai Yaar Pazhippaar - (தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)