| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 216 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4 | தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4 | தேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய ஆவி,Aavi - உயிரை செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து) வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |