Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 216 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
216பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4
தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4
தேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய
ஆவி,Aavi - உயிரை
செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை
காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;