Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2158 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2158முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருமலை ஒன்றுமே யல்ல கிடீர் உகந்து அருளின தேசங்களுக்கும் இப்படிக் கிடீர்-என்கிறார் அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்திக்க நம்முடைய செயலால் வந்த துக்கங்கள் அடைய ஓடிப் போம் -என்கிறார் – நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத் தன்னடையே ஓடிப் போம் என்கிறார் – 77
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
வேங்கடமும், Vengadhamum - திருமலையும்
விண்ணகரும், Vinnagarum - வைகுந்தமாநகரும்
வெஃகாவும், Veghavum - திருவெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும், Aghadha Poo Kidangin Neel Koval Pon Nagarum - பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
நான்கு இடத்தும், Naanthu Idaththum - (ஆகிய) நான்கு திருப்பதிகளிலும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால், Nindraan Irundhaan Kidandhaan Nadandhaan Endraal - (வரிசைக்கிரமமாக) (எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர், Idar - துக்கங்களெல்லாம்
கெடும் ஆம், Kedum Aam - விட்டோடிப் போய்விடும்