| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2157 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார் தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் – பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப்பாட்டை ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்- 76 | வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங் கடம். | வழி நின்று, Vazhi Nindru - பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று நின்னை தொழுவார், Ninnai Thozhuvaar - உன்னை ஆச்ரயிக்கு மவர்கள் வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர், Vazhuvamozhi Nindra Moorththiyare Aavar - உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்; (இதைப்பற்றிச் சொல்லவேணுமோ?) மண் அளந்த சீரான் திருவேங்கடம், Man Alandha Seeraan Thiruveengadam - உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே பழுது ஒன்றும் வாராத வண்ணமே, Pazhuthu Ondrum Vaaradha Vanname - ஒரு குறையு மில்லாதபடி விண் கொடுக்கும், Vin Kodukkum - (ஆச்ரிதர்களுக்கு) மோக்ஷமளிக்கக் காண்கிறோமன்றோ. |