| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2156 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப் பெற்றவர்கள் இறே விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார் என்கிறார் – 75 | காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள், ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி. | திருமாலே, Thirumaalee - லக்ஷ்மீநாதனே! உன்னை, Unnai - (பரமபுருஷனான) உன்னை உன்ன, Unna - ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில் காப்பு, Kaappu - பிரதிபந்தகங்கள் கழியும், Kazhiyum - விட்டு நீங்கும்; உன்னை உன்ன, Unnai Unna - உன்னை நினைக்கு மளவில், அருவினைகள் ஆப்பு, Aruvinaihal Aappu - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும் அவிழ்ந்து ஒழியும், Avizhnthu Ozhiyum - அவிழ்ந்துபோம்; உன்னை சிந்திப்பார்க்கு, Unnai Sindhippaarakku - உன்னை த்யானிப்பவர்களுக்கு மூப்பு இல்லை, Mooppu Illai - கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்; நின் அடியை வந்திப் பார், Nin Adiyai Vandhi Paar - உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள் வழி, Vazhi - அர்ச்சிராதி மார்க்கத்தை காண்பர்-, Kaanbar - கண்டு அனுபவிக்கப்பெறுவர்கள். |