Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2156 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2156முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப் பெற்றவர்கள் இறே விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார் என்கிறார் – 75
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.
திருமாலே, Thirumaalee - லக்ஷ்மீநாதனே!
உன்னை, Unnai - (பரமபுருஷனான) உன்னை
உன்ன, Unna - ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு, Kaappu - பிரதிபந்தகங்கள்
கழியும், Kazhiyum - விட்டு நீங்கும்;
உன்னை உன்ன, Unnai Unna - உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு, Aruvinaihal Aappu - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும், Avizhnthu Ozhiyum - அவிழ்ந்துபோம்;
உன்னை சிந்திப்பார்க்கு, Unnai Sindhippaarakku - உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை, Mooppu Illai - கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார், Nin Adiyai Vandhi Paar - உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி, Vazhi - அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-, Kaanbar - கண்டு அனுபவிக்கப்பெறுவர்கள்.