Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2155 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2155முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவனை ஒழிய வேறு ஆஸ்ரயணீயர் இல்லை என்னா நின்றீர் என் தான் – ருத்ரன் ஆஸ்ரயணீயன் அன்றோ -என்னில் அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன் என்கிறார் – உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும் இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் – 74
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.
ஏற்றான், Aetraan - ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும்
எயில் எரித்தான், Eiyil Eriththaan - த்ரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான், Neetraan - சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான், Koora Orupaal Mangaiyaan - தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்
வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும்.
கங்கையான், Gangaiyaan - (அச்சடைமுடியில்) கங்கையைத் தாங்கிக்கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான், Pul Oornthaan - கருடனை வாஹநமாகவுடையவனும்
மார்வு இடந்தான், Maarvu Idandhaan - இரணியனது மார்வைப்பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான், Nizhal Mani Vannaththaan - நீலரத்நம்போலே குளிர்ந்தவடிவையுடையவனும்
பூ மகளான், Poo Magalhaan - பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாகவுடையவனும்
நீள் முடியான், Neel Mudhiyaan - நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான், Neel Kazhalhaan - நீண்ட திருவடிகளையுடையவனுமான சர்வேச்வரனுடைய
காப்பு, Kaappu - ரக்ஷணத்தில் அடங்கினவன்.