Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2145 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2145முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நயவேன் நள்ளேன் என்று இங்கனே துணியலாமோ எல்லாம் செய்தாலும் அவை வந்து மேலிடில் செய்வது என் என்னில் நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து என்னை மேலிடும்படி என்கிறார் – 1-ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கையும் 2-அபாகவத ஜனங்களோட்டை சஹ வாசம் பண்ணுகையும் 3-பாகவதர்களோடு சஹ வாசம் அற்று இருக்கையும் 4-ஈஸ்வரன் பக்கல் பிரதிபத்தியில் குறைந்து இருக்கையும் 5-புருஷகாரத்தில் அத்யவசாயக்  குறை யுண்டாகையும் இவை இறே தான் வினை வருகைக்கு அடி அவை பின்னை எனக்கு உண்டோ – என்கிறார்  – 64
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?
பிறர் பொருளை, Piraar Porulai - பரமபுருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன், Nayaveen - (என்னுடையதென்று) விரும்பமாட்டேன்;
கீழாரோடு, Keelaarodu - ஸம்ஸாரிகளோடு
நள்ளேன், Nalleen - ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால், Uyarnthavarodu Allal - சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உயவேன், Uyaveen - காலக்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது, Thirumalai Alladhu - எம்பெருமானையன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன், Deivam Endru Aeththen - தெய்வமாகக் கொண்டு துதிக்கமாட்டேன்;
வியவேன், Viyaveen - (இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வகுணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
என் மேல், En Mel - (இப்படியான அறிமாட்டார்கள். பின்பு) எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என்மேலே
வினை, Vinai - அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என், Varum Aaru En - வரும்விதம் ஏது? [வரமாட்டாது]