Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2144 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2144முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்- 63
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம்.
தோள், Thol - (எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா, Avanai Allal Thozha - (வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானையல்லது வேறு எவரையும் வணங்கமாட்டா;
என்செவி இரண்டும், Enchevi Irandum - எனது காதுகளிரண்டும்
கேள் அவனது, Kel Avanathu - ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே, Inmozhiye - இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும், Kettu Irukkum - கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா, En Naa - என்னுடைய நாவானது
நாளும், Naalum - நாள்தோறும்
கோள் நாக அணையான், Kol Naaga Anaiyaan - மிடுக்கையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய அப்பெருமானது
குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளையே
கூறுவது, Koovudhuva - சொல்லா நிற்கிறது
நயம், Nayam - (இப்படியான பின்பு) சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன், Naanamaai Nalleen - வெட்கப்படாமல் விரும்பு வாரைப்போலே நான் விரும்பமாட்டேன்.