| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2144 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்- 63 | தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும், கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும் கோணா கணையான் கூரைகழலே கூறுவதே, நாணாமை நள்ளேன் நயம். | தோள், Thol - (எனது) கைகளானவை அவனை அல்லால் தொழா, Avanai Allal Thozha - (வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானையல்லது வேறு எவரையும் வணங்கமாட்டா; என்செவி இரண்டும், Enchevi Irandum - எனது காதுகளிரண்டும் கேள் அவனது, Kel Avanathu - ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான இன்மொழியே, Inmozhiye - இனிய பேச்சுக்களையே கேட்டு இருக்கும், Kettu Irukkum - கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்; என் நா, En Naa - என்னுடைய நாவானது நாளும், Naalum - நாள்தோறும் கோள் நாக அணையான், Kol Naaga Anaiyaan - மிடுக்கையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய அப்பெருமானது குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளையே கூறுவது, Koovudhuva - சொல்லா நிற்கிறது நயம், Nayam - (இப்படியான பின்பு) சப்தாதி விஷயங்களை நாணாமை நள்ளேன், Naanamaai Nalleen - வெட்கப்படாமல் விரும்பு வாரைப்போலே நான் விரும்பமாட்டேன். |