| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2140 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய் விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் – 59 | அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம், மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண். | அடைந்த, Adaindha - அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற அரு, Aru - போக்குவதற்கு அருமையான வினையோடு, Vinaiyodu - பழவினைகளும் அல்லல், Allal - (அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும் நோய், Noy - சரீரவியாதிகளும் பாவம், Paavam - இப்போது செய்கிற பாவங்களும். மிடந்தவை, Midanthavai - [இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை மீண்டு ஒழிய வேண்டில், Meendu Ozhiy Vendid - வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால் முன், Mun - முன்பொருகால், நுடங்கு இடையை, Nudangu Idaiya - மெல்லிய இடையையுடையளான பிராட்டியை இலங்கை வைத்தான், Ilankai Vaiththan - லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய முரண் அழிய, Muran Azhiya - மிடுக்கு அழியும்படி முன் ஒரு நாள், Mun Oru Naal - ஸ்ரீராமனாய்ப்பிறந்தவொருகாலத்து தன் வில், Than Vil - தன்னுடைய வில்லை அம்கை, Amkai - அழகிய திருக்கையிலே வைத்தான், Vaiththan - எடுத்துப் பிடித்தவனான பெருமானே சரண், Saran - உபாயமாவான். |