Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2140 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2140முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய் விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் – 59
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான் சரண்.
அடைந்த, Adaindha - அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற
அரு, Aru - போக்குவதற்கு அருமையான
வினையோடு, Vinaiyodu - பழவினைகளும்
அல்லல், Allal - (அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும்
நோய், Noy - சரீரவியாதிகளும்
பாவம், Paavam - இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை, Midanthavai - [இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில், Meendu Ozhiy Vendid - வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன், Mun - முன்பொருகால்,
நுடங்கு இடையை, Nudangu Idaiya - மெல்லிய இடையையுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான், Ilankai Vaiththan - லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய, Muran Azhiya - மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள், Mun Oru Naal - ஸ்ரீராமனாய்ப்பிறந்தவொருகாலத்து
தன் வில், Than Vil - தன்னுடைய வில்லை
அம்கை, Amkai - அழகிய திருக்கையிலே
வைத்தான், Vaiththan - எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண், Saran - உபாயமாவான்.