| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 214 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 2 | குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2 | குண்டலம்,Kundalam - கர்ண பூஷணங்களானவை தாழ,Thaazha - (தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும் குழல்,Kuzhal - திருக் குழல்களானவை தாழ,Thaazha - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும் நாண்,Naan - திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது தாழ,Thaazha - (திருவுந்தி யளவும்) தாழந்தசையவும் எண் திசையோரும்,Enn Disaiyorum - எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும் இறைஞ்சி தொழுது,Erainji Thozhudhu - நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி ஏத்த,Ethan - ஸ்தோத்ரம் பண்ணவும் வண்டு அமர் பூ குழலார்,Vandu Amar Poo Kuzhalar - (இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்) வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய துகில்,Thugil - (ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த) புடவைகளை கைக் கொண்டு,Kaik Kondu - (தனது)கைகளால் வாரிக் கொண்டு விண் தோய் மரத்தானால்,Vin Thoi Maraththaanal - ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வேண்டவும்,Vendavum - (எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும் தாரானால்,Tharanaal - (அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |