Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2135 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2135முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அப் படுக்கையும் தள்ளிப் பொகட்டுத் தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன் என்கிறார் – எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து   பரிமாறும்படி   அவன் ஸ்வரூபம் – இது நிரைநிரை-என்று கொண்டு லஷணம் இருக்கிறபடி – நிரல் நிரை அணி சேர்ந்தது – 54
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.
செம் கண் அவன், Sem Kan Avan - செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி, Karavu Inri - மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம், Aravam - காளிய நாகத்தை
விட்டு, Vittu - விட்டடித்தும்
அடல் வேழம், Adal Vezham - பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து, Iruthu - (தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன், Aan - பசுக்களை
மேய்த்து, Meyththu - (வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம், Kurundham - அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை
ஒசித்து, Osiththu - ஒடித்துப் பொகட்டும்
புள்வாய், Pulvai - பகாசுரனுடைய வாயை
கீண்டு, Keendu - கிழித்தும்
குரவை, Kuravai - ராஸக்ரீடையை
கோத்து, Koththu - (இடைப்பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம், Kudam - குடங்களைக்கொண்டு
ஆடி, Aadi - கூத்தாடியும்
முலை, Mulai - பூதனையின் முலையை
உண்டு, Undu - (அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல், Mal - (கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு, Attu - கொன்றும்
குன்றம், Kundram - கோவர்த்தன மலையை
எடுத்த, Edutha - (குடையாக) எடுத்துப் பிடித்த இச்செயல்கள்