Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2133 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2133முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஏன் தான் -இவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்கை யரிதோ-என்னில் நாட்டில் துர்மாநிகளாய் அதிகாரிகளாய்த் திரிகிறவர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள் நிர்வஹித்துக் கொள்ளுகிறது அவனை ஆஸ்ரயித்துக் காண் என்கிறார்  – 52
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
எண்மர், Enmar - அஷ்ட வஸுக்களும்
பதினொருவர், Pathinoruvar - ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர், Eer Aruvar - த்வாத சாதித்யர்களும்
ஓர் இருவர், Oru Irugar - இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
வைகலும், Vaikalum - (ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்) நாள்தோறும்
வண்ணம் மலர் ஏந்தி, Vannam Malar Aendhi - நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு
நண்ணி, Nanni - (எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால், Oru Maalaiyal - ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது, Ovaadhu - இடைவிடாமல்
எப்போதும், Eppodhum - எல்லா வேலைகளிலும்
பரவி, Paravi - துதிசெய்து
திருமாலை சென்று, Thirumalai Sendru - திருமகள் கொழுநனைக்கிட்டி
கைதொழுவர், Kaithozhuvar - வணங்குவர்கள்