| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2131 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு அவனைக் காண்கை சால எளிது என்கிறார் – 50 | அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம் பரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர் ஏற்றானைக் காண்ப தெளிது. | அரிய, Ariya - அடக்கமுடியாத புலன் ஐந்து, Pulan Aindhu - பஞ்சேந்திருயங்களையும் அடக்கி, Adakki - கட்டுப்படுத்தி, ஆய், Aai - ஆராயந்தெடுக்கப்பட்ட மலர், Malar - புஷ்பங்களை கொண்டு, Kondhu - கையில் ஏந்திகொண்டு ஆர்வம் புரிய பரிசினால், Aarvam Puriya Parisinaal - அன்பு மிகுந்த விதத்தினாலே புல்கில், Pulkil - கிட்டப்பார்த்தால் பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால், Periyan Aai Maatrathu Veetrirundha Maavali Paal - ‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தையுடையனாய் தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலியிடத்தில் வண்கை, Vankai - உதாரமான தனது திருக்கையாலே நீர் ஏற்றானை, Neer Aetranai - உதகதாநம் வாங்கின பெருமானை காண்பது, Kaanbathu - ஸேவிப்பது எளிது, Elidhu - ஸுலபமாகும். |