| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 213 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 1 | ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1 | ஆற்றில் இருந்து,Aatril Irundhu - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு விளையாடுவோங்களை,Vilaiyaaduvongalai - விளையாட நின்ற எங்கள் மேல் சேற்றால் எறிந்து,Saetral Erindhu - சேற்றை விட்டெறிந்து வளை,Valai - எங்களுடைய கை வளைகளையும் துகில்,Thugil - புடவைகளையும் கைக் கொண்டு,Kaik Kondu - (தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு காற்றில்,Kaatril - காற்றிலுங் காட்டில் கடியன் ஆய்,Kadian Aai - மிக்க வேகமுடையவனாய் ஓடி,Odi - (அங்கு நின்றும்) ஓடி வந்து அகம் புக்கு,Agam Pukku - (தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு மாற்றமும்,Maatramum - (வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து) ஒரு வாய்ச் சொல்லும் தாரானாய்,Tharaanaai - அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வளைத் திறம்,Valai Thiram - (தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக பேசானால்,Paesaanal - (தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால் இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |