| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2125 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும் என்கிறார் – 44 | தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே, அவ்வண்ணம் அழியா னாம். | ஆழியான், Azhiyan - திருவாளியாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான், தமர் உகந்தது எவ்வுருவம், Thamar Ugandhadhu Evvuruvam - ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ, அவ்வுருவம் தானே ஆம், Avvuruvam Thane Aam - அவ்வுருவமாகத்தான் பரிணாமமடைவன்; தமர் உகந்த்து எப்பேர், Thamar Ugandthu Eppaar - ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ அப்பேர் ஆம், Appeer Aam - அந்தத் திருநாமமே தனக் காம்படியிருப்பன்; தமர், Thamar - ஆச்ரிதர்கள் உகந்து, Ugandhu - உகப்புடனே எவ்வண்ணம் சிந்தித்து, Evvanam Sindhiththu - குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து இமையாது இருப்பர், Imaiyadhu Irupper - ஓயாமல் பாவநை பண்ணிக்கொண்டிருப்பார்களோ அவ்வண்ணம் ஆம், Avvanam Aam - அவ்வண்ணமே யாவன் |