Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2124 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2124முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பிராட்டிமார் சந்நிதி எப்போதும் உண்டாகையாலே இனி விரோதியைப் போக்குகை என்று ஒரு பணி இல்லை – தம் தாமுடைய ருசிக்கு அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்கவே – விரோதிகள் அடங்கலும் தன்னடையே விட்டோடிப் போம் என்கிறார் 43
மனமாசு தீரு மறுவி னையும் சார,
தனமாய தானேகை கூடும், – புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.
புனம் மேய பூ துழாயான் அடிக்கே, Punam Maeya Poo Thuzhaayaan Adikke - தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற திருத்துழையை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம், Thozha Nirpaar Thamar Thaam - வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும், Manam Maasu Theerum - மனக்குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா, Aruvinaiyum Saaraa - (ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா:
தனம் ஆய, Thanam Aaya - (பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்), Thane Kaikoodum - தனக்குத்தானே வந்து கைபுகுரும்