Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2118 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2118முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ – என்றும் தன்னை இரப்பாளனாக்கி நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் – நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம் தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இறே என்ன வேண்டாதபடி திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்  – 37
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
வகை அறு, Vagai Aru - அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள், Nun Kaelvi Vaivargal - ஸூக்ஷ்மார்த்தச்ரவணமுடையவர்களான
வேதியர்கள், Vedhiyargal - வைதிகர்கள்
நாளும், Naalum - நித்தியமும்
புகை விளக்கும், Pugai Vilakkum - தூபதீபங்களையும்
பூ புனலும், Poo Punalum - புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு
திசை திசையின், Thisai Thisaiyin - பலதிக்குக்களில் நின்றும்
சென்று, Sendru - வந்து சேர்ந்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால், Venchankam Oothiya Vaai Maal - வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கப்பெற்ற
ஊர், Oor - திவ்யதேசமாம்.