| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2117 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ என்று இரக்க வேண்டாத படி அவன் தானே வந்து அர்த்தியாய் நின்ற படியை அநு சந்தித்து நீ இப்படி உன்னை அழிய மாறிக் கொண்டு வந்து கார்யம் செய்து சம்சாரிகளை உனக்காக்கிக் கொள்ளலாம் என்று பார்த்து -அத்தாலே -என்கிறார் – 36 | முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம் தரணி தனதாகத் தானே – இரணியனைப் புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ மண்ணிரந்து கொண்ட வகை? | முன்னம், Munnam - முற்காலத்தில் தரணி தனது ஆக தானே, Tharani Thanadu Aaga Thane - பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனை புண் நிரந்த, Pun Nirandha - புண்படுத்திப் பிளந்த வள் உகிர் ஆர், Val Ukir Aar - கூர்மையான நகங்கள் பொருந்திய பொன் ஆழி கையால், Pon Aazhi Kaiyala - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையினால் நீ, Nee - நீ மண் இரந்துகொண்ட வகை, Man Irandhukonda Vagai - (மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே, Muranai Vali Tholaitharku Aam Endrae - (ஸம்ஸாரிகளின்) முரட்டுத்தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?. |