| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2116 | முதல் திருவந்தாதி || யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது – அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் 35 | ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி, நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து முடியான் படைத்த முரண்? | ஆறிய அன்பு இல், ஆறிய அன்பு இல் - நிரம்பின பக்தியில்லாதவர்களாய் அடியார், அடியார் - சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள் தம் ஆர்வத்தால், தம் ஆர்வத்தால் - தங்களுடைய ஸ்நேஹத்தாலே கூறிய, கூறிய - சொல்லும் வார்த்தைகளை குற்றம் ஆ, குற்றம் ஆ - குற்றமாக நீ கொள்ளல், நீ கொள்ளல் - நீ கொள்ளாதே; ஈர் ஐந்து முடியான், ஈர் ஐந்து முடியான் - (அது ஏனெனில்) பத்துத்தலைகளையுடையனானராவணன். படைத்த, படைத்த - புத்திபூர்வகமாகப் பண்ணின முரண், முரண் - தப்புக்காரியமானது நெடியோய், நெடியோய் - பெருமை பொருந்திய உன்னுடைய அடி, Adi - திருவடிகளை தேறி அடைதற்கு அன்றே, தேறி அடைதற்கு அன்றே - தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ? |