Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2114 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2114முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனை உள்ளீடாகக் கொள்ளாதே நாட்டார் ஓதுவது உரு எண்ணுவதாய்க் கொண்டு செய்யா நிற்கிற சந்த்யாதி கர்மங்களாலே ஒரு பிரயோஜனம் இல்லை கிடீர் என்கிறார் 33
நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
பூமேல், பூமேல் - திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு, நான்முகற்கு - பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து, நகரம் அருள் புரிந்து - இருப்பிடத்தை ஏற்படுத்தியருளியும்
பகர, பகர - (யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை, Marai - வேதத்தை
பயந்த, பயந்த - உபகரித்தும்வைத்த
பண்பன், பண்பன் - குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை, பெயரினை - திருநாமங்களை
பிந்தியால், பிந்தியால் - மனத்தினால்
சிந்தியாது, சிந்தியாது - எண்ணாமல்
ஓதி உரு எண்ணும், ஓதி உரு எண்ணும் - ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என், அங்கு ஆம் பயன் என் - உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)