Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2113 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2113முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானத்தில் அந்வயம் இல்லையே யாகிலும் அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர் -என்னுதல் அன்றிக்கே அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு அவனைச் சென்று கிட்டப் போமோ -என்றாதல் 32
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்
இமையாத கண்ணால், இமையாத கண்ணால் - [ஞானத்தில் குறைவில்லாதநெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல, இருள் அகல - [அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி, Nookki - (தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா, அமையா - த்ருப்திபெற்று அடங்கியிராத
பொறி புலன்கள் ஐந்தும், பொறி புலன்கள் ஐந்தும் - பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்சவிஷயங்களையும்
நமையாமல், நமையாமல் - அடக்காமலே
ஆகத்து அணைப்பார், ஆகத்து அணைப்பார் - (மாதர்களின்) தேஹத்தை அணைத்துக்கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான், ஆயிரம் வாய் நாகத்து அணையான் - ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப்படுக்கையாகவுடைய எம்பெருமானது
நகர், நகர் - நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே, அணைவரே - கிட்டப்பெறுவர்களோ?.