| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2113 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானத்தில் அந்வயம் இல்லையே யாகிலும் அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர் -என்னுதல் அன்றிக்கே அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு அவனைச் சென்று கிட்டப் போமோ -என்றாதல் 32 | இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய் நாகத் தணையான் நகர் | இமையாத கண்ணால், இமையாத கண்ணால் - [ஞானத்தில் குறைவில்லாதநெஞ்சு என்னும்] உட்கண்ணாலே இருள் அகல, இருள் அகல - [அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக நோக்கி, Nookki - (தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு அமையா, அமையா - த்ருப்திபெற்று அடங்கியிராத பொறி புலன்கள் ஐந்தும், பொறி புலன்கள் ஐந்தும் - பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்சவிஷயங்களையும் நமையாமல், நமையாமல் - அடக்காமலே ஆகத்து அணைப்பார், ஆகத்து அணைப்பார் - (மாதர்களின்) தேஹத்தை அணைத்துக்கொண்டு கண்டபடி திரிபவர்கள் ஆயிரம் வாய் நாகத்து அணையான், ஆயிரம் வாய் நாகத்து அணையான் - ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப்படுக்கையாகவுடைய எம்பெருமானது நகர், நகர் - நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை அணைவரே, அணைவரே - கிட்டப்பெறுவர்களோ?. |