| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2110 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான் என்று பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் 29 | இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி | இறையும், இறையும் - ஸ்ரீவைகுண்ட நாதனாயும் நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான், நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான் - பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான், பிறை மருப்பின், பிறை மருப்பின் - பிறைபோன்ற தந்தத்தையுடையதும் பைங்கண், பைங்கண் - பசுமைதங்கிய கண்களையுடையதுமான மால் யானை, மால் யானை - பெரியகஜேந்திரனை படு துயரம், படு துயரம் - (முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும் காத்து அளித்த, காத்து அளித்த - ரக்ஷித்தருளின செம் கண் மால் கண்டாய், செம் கண் மால் கண்டாய் - புண்டரீகாக்ஷனான பெருமான்காண்; தெளி, தெளி - [நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள். |