| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2109 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி இரா நின்றது என்னுதல்- அன்றிக்கே – பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் – அன்றிக்கே நீர்மையைச் சொல்லிற்று ஆதல் 28 | கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத் தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை | கார் வண்ணத்து ஐய, கார் வண்ணத்து ஐய - மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே வலம்புரியும், வலம்புரியும் - வலம்புரிச்சங்கமும் நேமியும், நேமியும் - சக்கரமும் கைய, Kaiya - என் கையிலுள்ளன; மலர் மகள், Malar Magal - பெரியபிராட்டியார் நின் ஆகத்தால், நின் ஆகத்தால் - உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்; செய்ய மறையான், செய்ய மறையான் - சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான் நின் உந்தியான், நின் உந்தியான் - உனது உந்திக்கமலத்திலுள்ளான்; மா மதிள் மூன்று எய்த இறையான், மா மதிள் மூன்று எய்த இறையான் - பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான் நின் ஆகத்து இறை, நின் ஆகத்து இறை - உனது திருமேனியின் ஏகதேசம் |