Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2109 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2109முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி இரா நின்றது என்னுதல்- அன்றிக்கே – பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் – அன்றிக்கே நீர்மையைச் சொல்லிற்று ஆதல் 28
கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை
கார் வண்ணத்து ஐய, கார் வண்ணத்து ஐய - மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே
வலம்புரியும், வலம்புரியும் - வலம்புரிச்சங்கமும்
நேமியும், நேமியும் - சக்கரமும்
கைய, Kaiya - என் கையிலுள்ளன;
மலர் மகள், Malar Magal - பெரியபிராட்டியார்
நின் ஆகத்தால், நின் ஆகத்தால் - உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான், செய்ய மறையான் - சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான், நின் உந்தியான் - உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான், மா மதிள் மூன்று எய்த இறையான் - பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை, நின் ஆகத்து இறை - உனது திருமேனியின் ஏகதேசம்