Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2105 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2105முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி இங்கனே இருக்கிற நாம் ஒன்றை வேண்டி அது பெறாமையாலே களவு காணப் புக்கு கட்டுண்டோமாக வேணுமோ -என்ன கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் 24
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
ஓங்கு ஓதம் வண்ணா, ஓங்கு ஓதம் வண்ணா - ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவையுடையவனே!
விரலோடு வாய் தோய்ந்த, விரலோடு வாய் தோய்ந்த - (நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது) உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
கண்டு, கண்டு - பார்த்து
உரலோடு உற பிணித்த நான்று, உரலோடு உற பிணித்த நான்று - (உன்னைத் தண்டிக்கவேண்டி) உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தபோது
குரல் ஓவாது, குரல் ஓவாது - நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி, ஏங்கி - ஏங்கிக்கொண்டு
நினைந்து, நினைந்து - (அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக்கொண்டு
அயலார் காண, அயலார் காண - அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே, இருந்திலையே - இருந்தாயல்லவோ?
உரை, உரை - உண்மையாகச் சொல்லு.