| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2105 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி இங்கனே இருக்கிற நாம் ஒன்றை வேண்டி அது பெறாமையாலே களவு காணப் புக்கு கட்டுண்டோமாக வேணுமோ -என்ன கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் 24 | விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை | ஓங்கு ஓதம் வண்ணா, ஓங்கு ஓதம் வண்ணா - ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவையுடையவனே! விரலோடு வாய் தோய்ந்த, விரலோடு வாய் தோய்ந்த - (நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது) உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த வெண்ணெய், Vennai - வெண்ணெயை ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள் கண்டு, கண்டு - பார்த்து உரலோடு உற பிணித்த நான்று, உரலோடு உற பிணித்த நான்று - (உன்னைத் தண்டிக்கவேண்டி) உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தபோது குரல் ஓவாது, குரல் ஓவாது - நீ கத்துகிற கத்தல் நீங்காமல் ஏங்கி, ஏங்கி - ஏங்கிக்கொண்டு நினைந்து, நினைந்து - (அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக்கொண்டு அயலார் காண, அயலார் காண - அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி இருந்திலையே, இருந்திலையே - இருந்தாயல்லவோ? உரை, உரை - உண்மையாகச் சொல்லு. |