Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2101 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2101முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் அவனைப் பெற்று களித்த படி சொல்லிற்று கீழ் அவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும் சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் 20
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று
பெற்றார், பெற்றார் - மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல, தளை கழல - கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து, Perndhu - (திருப்பாற்கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்)
ஓர் குறள் உரு ஆய், ஓர் குறள் உரு ஆய் - விலக்ஷண வாமந வேஷத்தையுடையனாய்
செற்றார் படி, செற்றார் படி - ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த, கடந்த - அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட
செம் கண் மால், செம் கண் மால் - புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை, நல் தாமரை மலர் சே அடியை - அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர், வானவர் - இந்திராதி தேவர்கள்
கைகூப்பி, கைகூப்பி - அஞ்ஜலி செய்துகொண்டு
நிரை மலர் கொண்டு நின்று, நிரை மலர் கொண்டு நின்று - தொடைவாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து
ஏத்துவர், ஏத்துவர் - துதிப்பர்கள்;
ஆல், Aal - ஐயோ! (அப்போது அவர்களைப்போலே தாமும் துதிக்கப்பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)