திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2098 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2098முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய் நான் இழந்தேனோ அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர் நான் இழந்தது – என்கிறார் – சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ – பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் 17
அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள் ளூர்ந்தான் உலகளந்த நான்று
பதவுரை Show / Hide
இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடய
ஆகம், Aagam - மார்வை
வடி உகிரால், வடி உகிரால் - கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான், ஈர்ந்தான் - கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான், இரு சிறை புன் ஊர்ந்தான் - பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று, உலகு அளந்த நான்று - உலகளந்த காலத்திலே
அடியும், அடியும் - திருவடி
படி கடப்ப, படி கடப்ப - பூமியை அளந்துகொள்ள
தோள், Thol - திருத்தோள்கள்
திசைமேல் செல்ல, திசைமேல் செல்ல - திக்குகளிலே வியாபிக்க
முடியும், முடியும் - கிரீடம்
விசும்பு, விசும்பு - மேலுலகத்தை
அளந்தது, அளந்தது - அளவுபடுத்திக்கொண்டது
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள். (ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)