| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2098 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய் நான் இழந்தேனோ அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர் நான் இழந்தது – என்கிறார் – சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ – பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் 17 | அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள் ளூர்ந்தான் உலகளந்த நான்று | இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடய ஆகம், Aagam - மார்வை வடி உகிரால், வடி உகிரால் - கூர்மையான நகங்களாலே ஈர்ந்தான், ஈர்ந்தான் - கிழித்தெறிந்தவனும் இரு சிறை புன் ஊர்ந்தான், இரு சிறை புன் ஊர்ந்தான் - பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான் உலகு அளந்த நான்று, உலகு அளந்த நான்று - உலகளந்த காலத்திலே அடியும், அடியும் - திருவடி படி கடப்ப, படி கடப்ப - பூமியை அளந்துகொள்ள தோள், Thol - திருத்தோள்கள் திசைமேல் செல்ல, திசைமேல் செல்ல - திக்குகளிலே வியாபிக்க முடியும், முடியும் - கிரீடம் விசும்பு, விசும்பு - மேலுலகத்தை அளந்தது, அளந்தது - அளவுபடுத்திக்கொண்டது என்பர், Enbar - என்று சொல்லுவர்கள். (ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!) |