Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2098 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2098முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய் நான் இழந்தேனோ அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர் நான் இழந்தது – என்கிறார் – சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ – பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் 17
அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று
இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடய
ஆகம், Aagam - மார்வை
வடி உகிரால், வடி உகிரால் - கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான், ஈர்ந்தான் - கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான், இரு சிறை புன் ஊர்ந்தான் - பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று, உலகு அளந்த நான்று - உலகளந்த காலத்திலே
அடியும், அடியும் - திருவடி
படி கடப்ப, படி கடப்ப - பூமியை அளந்துகொள்ள
தோள், Thol - திருத்தோள்கள்
திசைமேல் செல்ல, திசைமேல் செல்ல - திக்குகளிலே வியாபிக்க
முடியும், முடியும் - கிரீடம்
விசும்பு, விசும்பு - மேலுலகத்தை
அளந்தது, அளந்தது - அளவுபடுத்திக்கொண்டது
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள். (ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)