| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2097 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நான் இவ் விஷயத்தை நெடுங்காலம் உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும் பிரவணனாய் இழந்தேன் கிடீர் என்று சோகிக்கிறார் 16 | பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணரடி | கடல் ஓதம், கடல் ஓதம் - கடலலையானது கால், கால் - தன்திருவடி வாரத்திலே அலைப்ப, அலைப்ப - (துடைதட்டி உறங்கச் செய்வதுபோல) வீச கண்வளரும், கண்வளரும் - யோகநித்திரை செய்கின்ற செம்கண், செம்கண் - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவரும் அடல் ஓதம் வண்ணர், அடல் ஓதம் வண்ணர் - அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்கவொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய அடி, Adi - திருவடிகளை அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மீது கண்டு தொழுதேன், கண்டு தொழுதேன் - கண்ணாரக்கண்டு (இன்று) ஸேவிக்கப்பெற்ற அடியேன் பல பகலும், பல பகலும் - “கீழ்க்கழிந்த கால மெல்லாம் பழுதே போயின என்று, பழுதே போயின என்று - (இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று அஞ்சி அழுதேன், அஞ்சி அழுதேன் - மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன். |