Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2076 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2076திரு நெடும் தாண்டகம் || தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்– 25
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் என்சிந்தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே புனலரங்க மூரென்று போயினாரே. - 25
மின் இலங்கு திரு உருவும்,Min Ilangu Thiru Uruvum - மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்,Periya Tholum - பெரிய திருத்தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்,Kari Munintha Kaith Thalamum - குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும்
கண்ணும்,Kannum - திருக்கண்களும்
வாயும்,Vaayum - திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே,Than Alarntha Naru Thuzhaai Malarin Keezhe - தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய்மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு,Thaazhnthu Ilangu - தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்,Magaram Ser Kuzhaiyum - மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி,Kaatti - ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்,En Nalanum - என்னுடைய அழகையும்
என் நிறைவும்,En Niraivum - என் அடக்கத்தையும்
என் சிந்தையும்,En Sindhaiyum - என் நெஞ்சையும்
என் வளையும்,En Valaiyum - என் கைவளைகளையும்
கொண்டு,Kondu - அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு,Ennai Aalum Kondu - என்னை அடிமையாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த,Pon Alarntha - பொன் போல் மலர்ந்த
நறு,Naru - பரிமளம் மிக்க
செருந்தி பொழி லின் ஊடே,Serunthi Pozhilin Oodae - ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்,Punal Arangam Oor Endru Poyinaar - நீர்வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய்விட்டார்!.