Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 20 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
20பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 8
பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.–1-1-8
பத்து நளும் கடந்த,Paththu nalum kadandha - பத்துநாளுங் கழிந்த
இரண்டாம் நாள்,Erandaam naal - பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே
எத் திசையும்,Eth thisaiyum - எல்லாத் திக்குக்களிலும்
சயம் மரம்,Sayam maram - ஜயதோரண ஸ்தம்பங்களை
கோடித்து,Kodiththu - நாட்டி அலங்கரித்து
மத்தம் மா,Maththam maa - மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற
மலை,Malai - கோவர்த்தந பர்வதத்தை
தாங்கிய,Thaangiya - (குடையாக) ஏந்தி நின்ற
மைந்தனை,Maindhanai - குழந்தையாகிய கண்ணனை
ஆயர்,Aayar - இடையரானவர்கள்
உத்தானம் செய்து,Uthaanam seydhu - கைத் தலத்திலே வைத்துக் கொண்டு
உகந்தனர்,Ugandhanar - ஸந்தோஷித்தார்கள்.