Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 18 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
18பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 6
கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6
கையும்,Kaiyum - திருக்கைகளையும்
காலும்,Kaalum - திருவடிகளையும்
நிமிர்த்து,Nimirththu - (நீட்டி) நிமிர்த்து
கடாரம்,Kadhaaram - கடாரத்தில் (காய்ச்சின)
நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்,Pasu siru manjalal - குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய,Paiya - திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி,Aatti - ஸ்நாநம் செய்வித்து
ஐய,Ayya-mellidhaana - மெல்லிதான
நா,Naa - நாக்கை
வழித் தாளுக்கு,Vazhi thaalukku - வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட,Angaandhida - (கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை,Pillai - கண்ணபிரானுடைய
வாயுள்,Vaayul - வாயினுள்ளே
வையம் ஏழும்,Vaiyam ezhum - உலகங்களையெல்லாம்
கண்டாள்,Kandaal - ஸாக்ஷத்கரித்தாள்.