Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 165 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
165பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4
அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே!
பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே
மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின்
உரு,Uru - ரூபத்தை
கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு
வருவான்,Varuvaan - வருபவனாகிய
கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை)
இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ,Pothukko - விரைவாக
வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய்