Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 163 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
163பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2
பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
இவன்,Ivan - இப் பிள்ளை
முன்னம்,Munnam - முன்பு
பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை
உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை,Pillai - பிள்ளை காண்
மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள
சகடும்,Sagadum - சகடத்தையும்
மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்,Iruththavan - முறித்தவன்
காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை
வந்து,Vandhu - (நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக.
தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய்