Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 161 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
161பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க. 10
கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10
கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும்
மலி, Mali - சிறந்த
மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை
உகந்து, Ugandhu - விரும்பி
வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய
அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின
ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை
பார், Paar - பூமியிலே
மலி, Mali - சிறந்த
தொல், Thol - பழமையான
புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சீர்மலி, Seermali - அழகு நிறைந்த
செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய
பாடல், Paadal - (இப்) பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
யாதும், Yaadhum - சிறிதும்
தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர்