Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 155 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
155பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராட வேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள். 4
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4
கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய
புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே
வந்த, Vandha - (நலிவதாக) வந்த
கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம், Sakadam - சகடத்தை
உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு
வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள
பேய் மகள், Pei Magal - பூதனை யானவள்
துஞ்ச, Thunja - முடியும்படி
முலை, Mulai - (அவளுடைய) முலையிலே
வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த
பிரானே, Pirane - உபகாரகனே!
மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன்
அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய்