Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 147 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
147பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 9
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9
சொல்லுவார் சொல்லை,Solluvaar Sollai - சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி,Mey Endru Karuthi - (நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை,Vennaiyai - வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்,Thoduppu Undaai - களவு கண்டு உண்டாய்
என்று,Endru - என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து,Kaiyai Pidiththu - (என்) கையைப் பிடித்து
காண்,Kaan - (பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு,Karai Uralodu - விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை,Ennai - (ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே,Kattitrilaiye - நீ கட்ட வில்லையா? (என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
சிரிதரா,Siridharaa - (அதற்கு யசோதை சொல்லுகிறாள்) ஸ்ரீதரனே!
செய்தன,Seidhanai - (நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி,Solli - சொல்லிக் கொண்டு
சிரித்து,Siriththu - புன் சிரிப்புச் செய்து
அங்கு,Angu - அங்கே (தூரத்தில்)
இருக்கில்,Irukkil - (பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது,Un Kaadhu - உன் காதுகள்
தூரும்,Thoorum - தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே,I Nindra Kaarigaiyaar Siriyame - (உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை,Kaiyil Thiriyai - (என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்,Idukidai - இட்டுக் கொள்வாயாக.