Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 139 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
139பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 1
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1
பாடு உடைய,Paadu Udaiya - பெருமையை உடைய
நின் தந்தையும்,Nin Thandaiyum - உன் தகப்பனும்
போய்,Poi - (வெளியே) போய்
தாழ்த்தான்,Thaazhthaan - (திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்,Poru Thiral - போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்,Kanjan - கம்ஸனோ
கடியன்,Kadiyan - (உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்,Kadal - கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா,Vannaa - வடிவை யுடையவனே!
உன்னை,Unnai - உன்னை
காப்பாரும்,Kaapaarum - பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை,Illai - (இங்கு இப்போது) இல்லை;
தனியே போய்,Thaniye Poi - (நீயோவென்றால்) அஸஹாயனாய்ப் போய்
எங்கும்,Engum - கண்ட விடங்களிலும்
திரிதி,Thirithi - திரியா நன்றாய்;
பேய்,Pey - பூதனையினுடைய
முலை பால்,Mulai Paal - முலைப்பாலை
உண்ட,Unda - உட்கொண்ட
பித்தனே,Piththane - மதி மயக்கமுள்ளவனே!
கேசவ,Kesava - கேசவனே
நம்பி,Nambi - பூர்ணனானவனே!
உன்னை காது குத்த,Unnai Kaathu Kutha - உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்,Aai Paalar - இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்,Pendumkal Ellarum - எல்லாப் பெண்களும்
வந்தார்,Vandhaar - வந்திரா நின்றார்கள்;
நான்,Naan - நானும்
அடைக்காய்,Adaikkai - (அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்,Thiruthi Vaithen - ஆய்ந்து வைத்திருக்கிறேன்.