Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 132 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
132பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 5
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக் கணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை யுணாயே–2-2-5
வாசுதேவா,Vasudeva - கண்ணபிரானே!
தீய புந்தி,Theeya bundhi - துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்,Kanjan - கம்ஸனானவன்
உன் மேல்,Un mel - உன் பக்கலிலே
சினம் உடையவன்,Sinam udaiyavan - கோபங்கொண்டவனாயிரா நின்றான்;
சோர்வு பார்த்து,Sorvu paarthu - (நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்,Maayam thannal - வஞ்சனையால்
வலைப் படுக்கில்,Valaip padukkil - (உன்னை) அகப்படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்,Vaazha killein - (நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்,Thaayar - தாய்மார்களுடைய
வாய் சொல்,Vai sol - வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்,Karumam kandai - அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்,Saatri sonnen - வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா,Poga venda - (நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு,Aayar paadikku - திருவாய்ப்பாடிக்கு
அணி விளக்கே,Ani vilakke - மங்களதீபமானவனே!
அமர்ந்து வந்து,Amarnthu vandhu - பொருந்தி வந்து
என் முலை உணாய்,En mulai unai - முலை உண்பாயாக.