Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 113 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
113பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6
சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6
உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த
ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்,Saththiram - குடையை
ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு
தனி,Thani - ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்)
கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும்
கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்,Paththiram - விலக்ஷணமான
ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-;
பார்,Paar - பூமியை
அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-.