Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1047 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1047பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10
வில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalai - இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.