Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1046 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1046பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.) 9
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே –1-10-9
நந்தாத, Nandhaadha - ஒருகாலும் அணையாத
கொழு சுடரே, Kozhu Sudare - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே, Sindhamaniye - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய், Thiruveengadam Meya Enthaai - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய், Vandhaai - என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய், En Manam Pugundhaai - எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய், Manni Nindraai - உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி, Ini - இனிமேல்
யான், Yaan - அடியேன்
உன்னை என்றும் விடேன், Unnai Endrum Vidaen - உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.