Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1044 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1044பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.) 7
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே –1-10-7
மான் ஏய் மட நோக்கி திறத்து, Maan Aey Mad Nookki Thirathu - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த, Edhir Vanda - செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற, Aan Vidai Aezh Settra - ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா, Ani Varai Thoalaa - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே, Thene - தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே, Thiruveengadam Maa Malai Maeya Kone - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம், En Manam - என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு, Kudikondru - இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய், Irundhai - நிலைபெற்றிரா நின்றாய்.