| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1043 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.) 6 | மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6 | மன்னா, Mannaa - நிலைத்திராத இ மனிசப் பிறவியை, I Manisap Piraviyai - இந்த மநுஷ்யஜன்மத்தை நீக்கி, Neekki - போக்கடித்து தன் ஆக்கி, Than Aakki - தனக்கு ஆளாக்கிக்கொண்டு தன் இன் அருள் செய்யும், Than In Arul Seyyum - தனது பரமகிருபையைச் செய்கின்ற தலைவன், Thalaivan - ஸ்வாமியும், மின் ஆர் முகில் சேர், Min Ar Mukil Ser - மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே மேய, Meya - எழுந்தருளியிருக்கிற என் ஆனை, En Aanai - எனது ஆனை போன்றவனுமான என் அப்பன், En Appan - எம்பெருமான் என் நெஞ்சில் உளானே, En Nenchil Ulaaney - எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான் |