Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1043 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1043பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.) 6
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6
மன்னா, Mannaa - நிலைத்திராத
இ மனிசப் பிறவியை, I Manisap Piraviyai - இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி, Neekki - போக்கடித்து
தன் ஆக்கி, Than Aakki - தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும், Than In Arul Seyyum - தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன், Thalaivan - ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர், Min Ar Mukil Ser - மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருக்கிற
என் ஆனை, En Aanai - எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன், En Appan - எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே, En Nenchil Ulaaney - எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்