Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1041 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1041பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.) 4
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4
உறி மேல், Uri Mel - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய், Naru Ney - நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய், Amuthu Aaga Undaai - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய், Kural Aai - வாமநனாகி
நிலம், Nilam - பூமியை
ஈர் அடியாலே, Eer Adiyaale - இரண்டடியாலே
கொண்டாய், Kondai - அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம், Vin Thoy Sikaram - பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய, Thiruveengadam Maeya - திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா, Andaa - தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய், Adiyenukku Arul Puriyai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.