| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1041 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.) 4 | உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4 | உறி மேல், Uri Mel - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த நறு நெய், Naru Ney - நல்ல நெய்யை அமுது ஆக உண்டாய், Amuthu Aaga Undaai - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே! குறள் ஆய், Kural Aai - வாமநனாகி நிலம், Nilam - பூமியை ஈர் அடியாலே, Eer Adiyaale - இரண்டடியாலே கொண்டாய், Kondai - அளந்து கொண்டவனே! விண் தோய் சிகரம், Vin Thoy Sikaram - பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய திருவேங்கடம் மேய, Thiruveengadam Maeya - திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற அண்டா, Andaa - தேவாதி தேவனே! அடியேனுக்கு அருள் புரியாய், Adiyenukku Arul Puriyai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும். |