Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1040 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1040பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3
நீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும், Nilanum - பூமியையும்
முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு, Undu - அமுது செய்து
ஏர், Aer - அழகியதும்
இள, Ila - இளையதுமான
ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே
துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய், Endhai - ஸ்வாமியே!,
சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.